ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.
ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD
துபாய், ஷார்ஜாவுக்குச் சென்ற போது மிகவும் ரசித்த ஒரு சாலை என்றால் அது ஷேக் ஸாயத் ரோடுதான். 16 லேன்களைக் கொண்ட பிரம்மாண்டமான ரோடு.. முழுவதும் ட்ராஃபிக் காமிராவால் கண்காணிக்கப்படுகிறது.
எமிரேட் டவர்ஸ் ஹோட்டல்.. இந்த ரோட்டில் மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் இருக்கின்றன. நான்கு உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்களும் கூட..
ட்ராஃபிக் நெருக்கடி எல்லாம் இல்லாமல் நம்ம ரூட்டுல நாம போயிக்கிட்டே இருக்கலாம். நிறைய கடைகள்,ரெஸ்டாரெண்டுகள் இருக்கின்றன.
பொதுவாக துபாய்,ஷார்ஜா ரோடுகளில் பயணிப்பது பறப்பது போலிருக்கும். நிஜமாவே வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கும். மெட்ரோ ட்ரெயினுக்குப் போவதற்கும், எமிரேட் மால் போவதற்கும் இந்த ரோட்டுலதான் போகணும்.
இரு பக்கங்களிலும் நம்மைத் தொடர்ந்துவரும் கட்டிடங்கள் வித்யாசமான அமைப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆர்க்கிடெக்ஸிங் முறையில் அமைக்கப்பட்டிருக்கும். கிடார் போலவும் ஜெயண்ட்வீல் போலவும் கூட கட்டிடங்கள் உண்டு. பரிட்சார்த்த முயற்சியில் கட்டிடங்கள் கட்டி மகிழ்வது அவர்களுக்கே சாத்தியம்.
மெட்ரோ ட்ரெயினும், எமிரேட் மாலும் ஒரு ஜாலி அனுபவம். ஷேக் ஸாயத் ரோடு சைடில் இருக்கு. இந்த வியூவில் GOTHAM CITY போல என்று சொல்லப்படுகிறது. போகலாம் போகலாம் போயிக்கிட்டே இருக்கலாம்.
எல்லாரும் ஏதாவது இடத்தைப் பார்க்கப் பயணம் போவாங்க. ஆனால் துபாய் போனா காரில் போகும் பயண சுகத்தை அனுபவிக்க வேண்டியே ஒரு தரமாவது ஷேக் ஸாயத் ரோட்டில் பயணிச்சே ஆகணும் நீங்க.
1. வெளிநாட்டு ஷாப்பிங்.
2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.
4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )
5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)
6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும்,
7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்..
8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி.
9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..
10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.
11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.
12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI)
13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)
15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !
16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.
17. வாழ நினைத்தால் வாழலாம்.

'பரிவை' சே.குமார்11 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:18
பதிலளிநீக்குபடங்கள் அருமை அக்கா...
துபாய், ஷார்ஜா வந்திருக்கிறீர்கள். அபுதாபி வரவில்லையா?
பதிலளிநீக்கு
மனோ சாமிநாதன்11 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:50
என்ன தேனம்மை இது! துபாய், ஷார்ஜா வரை வந்திருக்கிறீர்கள்! ஒரு ஃபோன் செய்திருக்கலாமே?
பதிலளிநீக்கு
Unknown12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 2:38
இது நம்ம ஊரு விவசாயம் அழிந்ததினால் ஏற்பட்ட கூலித் தொழிலாளிகளின் புலம் பெயர்தலால் உருவான அழகு..! வானாளவிய கட்டிடங்களின் யன்னல்களின் வண்ணங்களோடு திருமணம் புரிந்து ஓரிரு மாதங்களில் பிரிந்துவந்த நம் சகோதர்களின் பிரிவாற்றாமைக் கண்ணீரும் கலந்திருக்கிறது..!
பதிலளிநீக்கு
Unknown12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:54
Sivasankaran kuriulathau 100% unmai
பதிலளிநீக்கு
Unknown12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:56
Sivasankaran karuthil 100% unmai ulathu.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:12
குமார் அபுதாபியும் வந்தோம்
மனோ வந்து 3 வருஷம் ஆச்சு :)
உண்மைதான் சகோ சிவசங்கரன் முனு
ஆம் பார்த்தசாரதி :(
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:12
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!