தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !
பொதுவாக விநாயகர், அம்மன் போன்ற சிலைகளையே நடுநாயகமாகப் பார்த்த நமக்கு தர்மபுரி அதியமான் அரண்மனை ஹோட்டலில் புத்தரைப் பார்த்ததும் வித்யாசமாக இருந்தது. ( ஒரு வாரம் தங்கியும் தர்மபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும் அதியமானின் புராதனக் கோட்டையைப் பார்க்காமல் வந்துவிட்டோமே என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. டாக்ஸிக்காரர்கள் கோட்டத்தையே கோட்டை என்று காட்டுகிறார்கள். கொடுமை ஹ்ம்ம். )
இங்கே ஓடும் வாடகைக் கார்களிலும் கூட விநாயகர் உருவம் இல்லாதது என்னவோ போலிருந்தது. இறைவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் தமிழ் நாட்டிலும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என உணர்ந்தேன்.
// கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில் தன் நாட்டுக்கு வெளியே உள்ள சத்யபுத்திரர் ஆளும் நாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள் //
இந்த நோக்கில் பார்த்தால் இங்கே புத்தரும் பௌத்தமும் அதிகம் வேரோடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்பை என்னுமிடத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் சமண முனிவருக்கு ’சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி’ கற்படுகைகள் வெட்டிக் கொடுத்திருப்பதாகவும் பொறிக்கப் பட்டிருக்கிறது. எனவே அக்காலத்தில் இவ்வூர்ப் பகுதிகளில் சமணமும் பௌத்தமும் சிறந்து விளங்கி இருக்கின்றன எனத் தெரியவருகிறது.
சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தது போல சமணப் பள்ளிகள் அமைத்தும் சமணக் குடைவரைக் கோயில்களைப் புதுக்கி அமைத்தும் கொடுத்துள்ளான் இவ்வரசன்.
இனி ஹோட்டல் அதியமான் அரண்மனை பற்றி.
மெய்யாலுமே அரண்மனைதான்.
இங்கே ஓடும் வாடகைக் கார்களிலும் கூட விநாயகர் உருவம் இல்லாதது என்னவோ போலிருந்தது. இறைவழிபாடும் கடவுள் நம்பிக்கையும் தமிழ் நாட்டிலும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது என உணர்ந்தேன்.
// கிமு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில் தன் நாட்டுக்கு வெளியே உள்ள சத்யபுத்திரர் ஆளும் நாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் எனச் சிலர் கருதுகிறார்கள் //
இந்த நோக்கில் பார்த்தால் இங்கே புத்தரும் பௌத்தமும் அதிகம் வேரோடி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜம்பை என்னுமிடத்தில் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றில் சமண முனிவருக்கு ’சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி’ கற்படுகைகள் வெட்டிக் கொடுத்திருப்பதாகவும் பொறிக்கப் பட்டிருக்கிறது. எனவே அக்காலத்தில் இவ்வூர்ப் பகுதிகளில் சமணமும் பௌத்தமும் சிறந்து விளங்கி இருக்கின்றன எனத் தெரியவருகிறது.
சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்தது போல சமணப் பள்ளிகள் அமைத்தும் சமணக் குடைவரைக் கோயில்களைப் புதுக்கி அமைத்தும் கொடுத்துள்ளான் இவ்வரசன்.
இனி ஹோட்டல் அதியமான் அரண்மனை பற்றி.
மெய்யாலுமே அரண்மனைதான்.