எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SERVICE APARTMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SERVICE APARTMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 மார்ச், 2021

கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

கானாடுகாத்தான் போன்ற சின்ன ஊர்களில் கூட சர்வீஸ் அபார்மெண்டுகள் வந்துவிட்டன. ஹெரிட்டேஜ் ஹோம்கள் அரசோச்சிக் கொண்டிருந்த ஊரில் இப்போது சர்வீஸ்  அபார்ட்மெண்டுகளும் காணக்கிடைக்கின்றன.

கானாடுகாத்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பல்வேறு ஊர்களிலும் வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்குமே இங்கே பெரிய வீடு என்று சொல்லப்படக்கூடிய பாரம்பரிய வீடுகள் உண்டு. இருந்தாலும் ஒரு ஃபங்க்‌ஷன் என்று வரும்போது இந்த அபார்ட்மெண்ட் வீடுகளையே தங்கத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அன்று பட்டாலை ,பத்தி, ஆல்வீடு, வளவுகளில் தூங்கப் பழகினோம். கிணற்றில் நீர் இறைத்துக் குளிப்போம். இன்று பிள்ளைகள் தனி பெட்ரூம், தனி பாத்ரூம் ( அதுவும் வெஸ்டர்ன் ஸ்டைல்) வேண்டுமென்கிறார்கள். ஒரு ஃபங்க்‌ஷன் என்று சென்றால் தங்க இன்று  இம்மாதிரியான சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் கிடைப்பது ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அம்மாதிரியான ஒன்று கானாடுகாத்தான் மாட்டா ஊரணி சிதம்பர விநாயகர் கோவிலின் வடக்குப் பக்கப் பின்புறம்  உள்ளது. அங்கே இரு வீடுகள் உள்ளன. ஒன்றின் வாடகை நாளொன்றுக்கு 2, 500 ரூ. இரண்டு வீடுகள் 5, 000. /-
இதன் உரிமையாளர் வள்ளி ஆச்சி காரைக்குடியைச் சார்ந்தவர்கள். தனது தகப்பனார் கொடுத்த இடத்தில் இம்மாதிரி சர்வீஸ் அபார்ட்மெண்ட் அமைத்துள்ளார்கள். மிக வசதியாக இருந்தது.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...