எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 டிசம்பர், 2022

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டின் விதானம் அன்று வைத்த மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்க முடியுமா. இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது சாமி வீட்டில் காணப்படும் இந்த விதானம்.


ஒருமுறை படைப்பு சமயம் சாமி வீட்டிற்குச் சென்றபோது மதிய வேளையில் உணவுக்குப் பின் படுத்திருந்து மேல்நோக்கிப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தேன் உறவினரோடு. அப்போது இந்த  விதானம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

வியாழன், 3 நவம்பர், 2022

ராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில் ஹோட்டல் குரு

 ராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில் ஹோட்டல் குரு.

 இராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில்தான் நகரத்தார் சத்திரம் அமைந்துள்ளது. 

அங்கே ரூம் கிடைக்காததால் அடுத்து இருந்த ஹோட்டல் குருவில் தங்கினோம். இருவர் , மூவர் தங்க வசதியான ஏசி அறைதான்.  டபிள் பெட் ஒன்றுதான். இன்னொருவர் தங்கினால் பெட் ஸ்ப்ரெட் , தலையணை, போர்வை தருகிறார்கள். தரையில் விரித்துத்தான் படுக்க வேண்டும். 


இந்தத் தெற்கு வாசலின் எதிரில்தான் அமைந்துள்ளது ஹோட்டல் குரு. 

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

 நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

மந்திராலயத்துக்கு இருமுறை சென்று வரும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அங்கே துங்கபத்ரைக்குச் சென்று ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டோம். அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்குது. எனவே இரண்டாம் முறை ஹைதையில் இருந்து சென்றபோது மந்திராலயம் & துங்கபத்ராவை எடுத்த படங்கள் பார்வைக்கு. 


துங்கபத்ரையைக் கடக்கும் பாலம். 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.

 நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.

ஹைதையில் செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷன் ஹுசைன் சாகர் லேக். 

டோமல் குடாவில் இருந்து ஒருமுறை போட்டிங்க் சென்று வந்திருக்கிறோம். அடுத்து எல்லாம் பயணப் பாதையில் தட்டுப்பட்ட ஏரியைத்தான் பார்க்க முடிந்தது. எங்கே ஏரி என கேக்குறீங்களா பாழாய்ப் போய் பேப்பர் குப்பைகளோடு பின்னாடியே வருது. 

இது ஹைதராபாத் செகந்திராபாத் ரயில் செல்லும் பாதையில் உள்ள மசூதி. இதைக் கடந்ததும் ஏரிதான். ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சுவர் அமைத்து அதோடு கம்பி வலையும் போட்டிருப்பது கண்ணைக் கவர்ந்தது. 

சனி, 9 ஜூலை, 2022

நீரின்றி அமையாது உலகு - 2. தாமரைத் தடாகங்கள்.

 நீரின்றி அமையாதுதான் உலகு. ஆனால் இதுபோல் கழிவுகளைக் கொட்டி ஆறு ஏரி ஏன் கடலைக் கூட மாசுபடுத்துகிறோமே இதெல்லாம் சரிதானா. 


ஹைதையில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியின் ஒரு பகுதிதான் இது. ப்ளாஸ்டிக் மிதக்கும் கழிவு நீராகி உள்ளது. நிறைய இடங்களில் சாக்கடையையும் கூட நதிகளில் ஏரிகளில் இணைத்துவிடுகிறார்கள். என்ன கொடுமை இது 

இது திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு உப்பளமாக இருக்கவேண்டும். இடம் இப்போது ஞாபகம் வரவில்லை. 

ஞாயிறு, 5 ஜூன், 2022

நீரின்றி அமையாது உலகு - 1.

 நீரின்றி அமையாது உலகு - 1.

நீரின்றி அமையாது உலகு. உண்மைதான். நதிக்கரையோர நாகரீகம் மட்டுமல்ல. இன்றைய மெட்ரோ சிட்டி வாழ்விலும் கூட புழல் நிரம்பியதா வீராணம் வருமா என்றெல்லாம்தான் யோசிக்க வேண்டி இருக்கு. எனவே பயணப் பொழுதுகளிலும் ஆன்மீகத் தலங்களிலும் நான் பார்த்த புஷ்கரணி, தீர்த்தங்கள், நீர் நிலைகள், கம்மாய்கள், ஊருணிகள், நதிகள், கடல் இவற்றை ( பம்ப்செட், கிணறு கூட வரலாம். ) ஆகியவற்றைக் க்ளிக்கி இங்கே பகிர்ந்துள்ளேன். 

இது வைவரன் கோவில் புஷ்கரணி. வைரவ தீர்த்தம். தீர்த்தக் கரைதனில் ஐந்து ரிஷபங்கள் காவல் வேறு. இதுவே அழகாக இருந்ததால் இப்படி எடுத்துள்ளேன். 

மேலே காண்பது அரியக்குடி பெருமாள் கோவிலின் கருட தீர்த்தம். கிணறு வடிவில் உள்ளது இத்தீர்த்தம். இறங்கிச் செல்லப் படிகள் உண்டு. வெளிப்பக்கம் கதவு போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். 

செவ்வாய், 10 மே, 2022

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 1. ஃபிரிட்ஜில் ஒரு கப்பில் கடுகு போட்டு நீர் ஊற்றி வைத்தால் ஃபிரிட்ஜில் பல்வேறு பொருட்கள், புளித்த தயிர், புளித்த மாவினால் ஏற்படும் கெட்ட வாடை நீங்கும்.

2.  தங்க நகைகளை ஷாம்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் பிரஷ் போட்டுத் தேய்த்துக் கழுவி உலர்ந்ததும் சிந்தூரப் பொடியால் நாய்த்தோலை வைத்துத் தேய்க்க புதிது போல மின்னும்.

3. வறுத்த கொள்ளுப்பொடி, அரை டீஸ்பூன், வறுத்த பார்லிப்பொடி அரை டீஸ்பூன், ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா கொத்துமல்லி கருவேப்பிலைத் தழைகள் போட்டு இரண்டு கப் நீரூற்றி வேக வைத்து எடுத்து மசித்து உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பருக உடல் எடை குறையும்.

4.நான்ஸ்டிக் பாத்திரங்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி மிதமான தீயில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஹைஃப்ளேமில் சமைத்தால் அதில் உருவாகும் கெமிக்கல் உடலுக்குக் கெடுதல்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை -3

பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.


அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.

நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.

சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும்.  இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.

இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.


இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)

புதன், 9 மார்ச், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. பயணங்கள் முடிவதில்லை. எனவே வாங்க இன்னும் சில பயணங்களையும் பாதைகளையும், மேலும் கட்டிடக்கலையின் அதிசயமான  இருபக்கமும் ஒரே ஒரு தூணில் கட்டி நிறுத்திய பாலத்தையும் பார்ப்போம், ரசிப்போம்.

இது திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ஜங்ஷன் என்பதால் நிறைய தண்டவாளப் பாதைகள். இந்த மேம்பாலமும் ட்ரெயின் செல்லும் வரும் வழித்தடமும் அதன் மேல் பொன் நிறம் பூசும் மாலை வெய்யிலும் என்னை மயக்க இந்தப் புகைப்படம் எடுத்தேன்.




கோவை டாடாபாத்தின் ஆறுமுக்கு. ஆறு பிரிவாகப் பிரியும் பாதைகள் இங்கே வித்யாசம். அதில் ஒரு முக்கில் இந்த அம்மன் அருளாட்சி புரிகிறாள். கொள்ளை அழகு இல்ல :)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 1.

"LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL EXPERIENCES TO ENJOY. "


பயணங்கள் பலவிதம். நீரின் பயணத்தைப் பற்றி ஒரு பாடல்வரும். அனைவரும் கேட்டிருப்பீர்கள். “தீம்தனனா தீம்தனனா.. நதியே நதியே..”. அதேபோல் சேதுவில் வரும் இப்பாடலும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்..” பிடிக்கும். ஹைவேஸ், பைபாஸ் சாலைகள் ஓரளவு பரவாயில்லை. ஊருக்குள் செல்லும் மற்ற சாலைகள் எல்லாம் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லை.

அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்ளும்போது எடுத்த படங்கள் என் கமெண்ட்ஸுடன் உங்கள் பார்வைக்கு. முடிந்தவரை சென்ற பாதைகளை அடையாளப்படுத்த முயல்கிறேன். ( வலைத்தளம் ஆரம்பித்ததே நம் பாதைகளை ஒழுங்குபடுத்தி எழுத்துப் பாதையில் செல்லத்தானே. :) ! இதை வலைப்பதிவர் அனைவரும் ஒப்புக் கொள்வீர்களென நினைக்கிறேன்.


காரைக்குடி டு குன்றக்குடி. பைபாஸ் வழியாக சென்றபோது எடுத்தது..

திங்கள், 10 ஜனவரி, 2022

மன்னை பூர்ணா

 

மன்னை பூர்ணா

 மன்னார்குடி சென்றிருந்தபோது பெரியகடைத்தெருவில் இருக்கும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம். 

நல்ல வசதியான ஹோட்டல். மன்னார்குடி இப்படி வளர்ச்சி அடைந்து வருவது குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கு. 

காலை ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் கிடையாது. ஒன்லி போர்டிங்க் மட்டும்தான்.

மூன்று நாட்கள் ரீஸனபிள் காஸ்டில் தங்கி சுற்றி இருக்கும் கோயில்கள் , தோழியர் வீடுகள் எல்லாம் சென்று வந்தேன். 


வரவேற்புப் பெண் வெகு அழகு.

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...