எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 மே, 2026

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

எனது பெருமதிப்பிற்குரிய சுசீலாம்மாவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அழைப்பிதழை வெளியிடுவதில் மகிழ்கிறேன். மேலும் விருதுபெற்ற திரு ஞானக்கூத்தனுக்கு வாழ்த்துகள்.

நான் ரசித்த அவருடைய கவிதை ஒன்று.

//// உயர்திரு பாரதியார்

July 30, 2006
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்,

வியாழன், 14 மே, 2026

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

ஈரோடு வாசிக்கிறது. புத்தகங்களை சுவாசிக்கிறது.

மஞ்சளுக்கு மகிமை பெற்ற ஈரோடு அதிக புத்தக வாசிப்பாளர்களையும் உடையது. மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட்3ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இது 8ஆம் ஆண்டாக நடைபெறுகிறது.. ஈரோடு வாசிப்பு இயக்கம் 2 ஆண்டு காலமாக இயங்குகிறது...

செவ்வாய், 12 மே, 2026

கயலுடன்..

கயலுடன்..

 கயலுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எடுத்த ஃபோட்டோக்கள் இருக்கு. சுமார்100க்கு மேல் தேறும். அவற்றில் சிலதை மட்டும் இங்கே பகிர்கிறேன் :) 

இது கயல் பிறந்தநாளின் போது எடுத்தது. லாமிக்கிளில்தான். நிறைய பிரபலங்கள் இருக்காங்க. யார்னு சொல்லுங்க பார்ப்போம் :)

திங்கள், 11 மே, 2026

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.

டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.



தினமலர் நிறுவனர், அமரர் திரு இராமசுப்பையர் அவர்களின் நினைவாக 30 ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்திவரும் தினமலர் குழுமத்துக்கு முதலில் பாராட்டுகள்.

சனி, 9 மே, 2026

புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

 புதினம். உலகளாவிய சிறுகதைப் போட்டி.-1,00,000 /- ரூபாய் பரிசு.

இமேஜாக மாற்றி அனுப்பிய சகோ ராம்ப்ரசாத்துக்கு நன்றி. :)
லண்டனில் இருந்து 20 ஆண்டுகளாக வெளிவரும் புதினம் என்ற இலவச மாதாந்திர தமிழ் சஞ்சிகைக்காக உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்மையின் சிறப்புப் பற்றி, “ தாயெனும் கோயில் ”என்னும் தலைப்பில் இன்னுமொரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் நெஞ்சைத் தொட்ட தாயின் நினைவையும் எழுதி அனுப்புங்க. ஏ -4 ஷீட்டில் 3 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பனும். ( அமரர் சின்னத்தங்கம் ரத்னம் நினைவாக அவரது புத்திரர் ரத்னம் சிவானந்தன் ( KINGSBURY ) இந்தப் போட்டிக்கான ஆதரவை வழங்குகிறார்.

வியாழன், 7 மே, 2026

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

அனைத்துலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான திரு பாரதிசுகுமாரன் ஐயா அவர்களின் முகநூல் பதிவைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

///// *மகாகவி பாரதி பிறந்த நாளை எழுத்தாளர் தினமாக அறிவிக்க வேண்டும்...*
*அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தொடக்க விழாவில் கோரிக்கை.*
சென்னை.11, சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது..

ஞாயிறு, 3 மே, 2026

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது:-

அம்மா இலக்கிய விருது.

வரும் சித்திரைத் திருநாள் பெண்களுக்கு இன்னும் சீரையும் சிறப்பையும் கொண்டு வருகிறது.அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது ( 10 பேருக்கு ) , உலகத் தமிழ்ச்சங்க விருது என முப்பெரும் விருதுகளை அறிவித்து நம் தமிழக முதல்வர் என் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயா அம்மா மகளிருக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள் அவர்களுக்கும் பரிசு பெறப்போகும் எழுத்துலக ஜாம்பவதிகளுக்கும். :)

சனி, 2 மே, 2026

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பை எனது மாமா லயன் வெங்கட் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்.

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

திரு ஞானக்கூத்தன் அவர்களுக்கு வாழ்த்துகள். எனது பெருமதிப்பிற்குரிய சுசீலாம்மாவின் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அழைப்பிதழை வெளியிடுவதில்...