எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஜூலை, 2025

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

 

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி, சக்தி செல்வி,  கீதா மதிவண்ணன், உமையாள், பவள சங்கரி, அகிலா புகழ், உஷா, யாழ் தர்மினி, ஈழவாணி, நிவேதா உதயராயன், சாய் இந்து,  சாந்தாதத் மேடம், சுபாஷிணி மேடம், சரஸ்வதி ராஜேந்திரன் மேடம் ..... எடுங்கலே பேனாவை :) -- கீபேடை.  எழுதுங்கலே கல்கி குறுநாவல் போட்டிக்கு.. ஒரு பரிசாவது வாங்கிர்ரம்லே :)


 சகோஸ் கோபி சரபோஜி, மனசு குமார், கேபிள் ஜி, சுரேகா, ரிஷபன், கோபால் சார், ஸ்ரீராம், கேஜிஜி, ஜி எம் பி சார், துளசி சகோ & கீத்ஸ், மதுரை சரவணன், கார்த்திக் சரவணன், தமிழ் உதயம், ஆர் ஆர் ஆர், கரந்தை ஜெயகுமார், இளங்கோ சார் தனபாலன் சகோ, ரூபன், கில்லர்ஜி, விஜய், முரளிதரன் சகோ, அருள்ராசா , நோர்வே நக்கீரா, முருகையா கந்ததாசன் சார், பசுந்திரா சசி, உங்களுக்கும் இதே வேண்டுகோள். எழுதுங்க பரிச வெல்லுங்க. 

பேர் குறிப்பிட விட்டுப்போன படைப்பாளிகள் கோபிக்க வேண்டாம். உங்களையும் சேர்த்துத்தான். கல்கி இதழில் பொறுப்பாசிரியர் முகநூல் நண்பர்களை அழைத்திருக்கிறார்.




இந்தப்பரிசு 1,20,000 (6x20,000)யை என் முக நூல் நண்பர்கள் தான் ஜெயிக்கணும்
**********************************************************************************************

எழுத தெரிந்த,எழுத முயற்சிக்கும்,கற்பனை வளமிக்க,அக்கம் பக்கம் நிறைய்ய கதைகளை கேட்டு தெரிந்து வைத்துள்ள அன்பு நண்பர்களே...

இதோ குறு நாவல் போட்டி...

இதெல்லாம் உங்களுக்கு ஜீஜீபி...உங்களால் முடியும் ..நிறைய்ய டைம் இருக்கு..விதிமுறை படிங்க..நாவல் எழுதி அனுப்புங்க..இந்த செய்தியை..ஷேர் பண்ணுங்க.

.என் முகநூல் நண்பர்கள் இந்த ஆறு பரிசையும் (20,000x6)ஜெயிக்கணும்...அது தான் ஆசை

-----உங்கள் அமிர்தம் சூர்யா



-----------------------------------------------------------------------------

ஆமா சிறுகதைப் போட்டி முடிவுகள் என்னாச்சுன்னு கேக்கலையே.

வடை போச்சு மக்காஸ்.. அந்தப் பரிசு நமக்கில்ல. :) மிகப் பெரிய ஜாம்பவான்களுக்குக் கிடைச்சிருக்கு.. வாழ்த்துகள் மூவருக்கும். சோம்பிக்கிடந்த எங்களையும் எழுதத் தூண்டிய கல்கிக்கும் நன்றிகள்.

/////அறிவிப்பு
***************

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியின் இறுதி தேர்வுக்கு எழுத்தாளர்.திரு.ம.வே.சிவக்
குமார்,
எழுத்தாளர்.

திருமதி.திலகவதி ஆகியோர் கல்கி அலுவலகம் வந்து இருந்தனர்.அவர்களுடன்..நான்
( அமிர்தம் சூர்யா)பொறுப்பாசிரியர் திரு.ஆர்.வெங்கடேஷ்.உதவி ஆசிரியர் பொன்.மூர்த்தி ஆகியோர்..

இவ்வாண்டுக்கான முதல் பரிசு(10000) புலம் பெயர்ந்த தமிழர்.திரு.இ.யனார்த்தனன்

,இரண்டாம் பரிசு (7500)திரு.ஆறாவயல் பெரியய்யா,

மூன்றாம் பரிசு (5000) திரு.தஞ்சாவூர் கவியாரர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது

கலந்துக்கொண்ட அனைவர்க்கும் நன்றி/
//


அப்பிடின்னு பொறுப்பா அறிவிப்பும் கொடுத்திருக்கிறார். கல்கியின் துணையாசிரியர் அமிர்தம் சூர்யா.

--- சரி குறுநாவல் போட்டிலயாச்சும் பார்ப்போம் கெலிப்பமான்னு..

கெலிக்கிறமோ இல்லையோ போட்டியில கலந்துக்கணும்னு ஒரு ஸ்ப்ரிட் வருது பாருங்க அதுதான் பெரிசு மக்காஸ். எதையாவது ஒண்ணை நாட்டு மக்களுக்குச் சொல்லியே ஆகணும்னு எழுத தொடங்குங்க. பரிசு கிடைச்சாலும் சரி இல்லாட்டாலும் சரி நம்ம ப்லாகுல போட்டுக்கலாமே. ஒரு புது படைப்பு, புது கண்ணோட்டம் புது எழுத்து கிடைக்குமே. நம் எழுத்தை நாமே ரசித்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு.  

பரிசு கிடைச்சா கல்கியில.. பரிசு கிடைக்காட்டி நம்ம ப்லாகுல.. எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க. !

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

கோகுலத்தின் சார்பில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நடுவராக.

கல்கி பவளவிழா - கோகுலம் - குதூகலப் போட்டிகள்.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

திருக்குறள் தீபன். 

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

கத்தியை விழுங்கிய மலேஷியா சங்கர்.

கல்கியும் நானும் &  FIVE - D - THEORY -யும்.

திங்கள், 2 ஜூன், 2025

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம்

பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு 

திருமதி சுபாஷிணி திருமலை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா.

நாள்: 08.11.2020. ஞாயிற்றுக்கிழமை  நேரம்: காலை 11.00 மணி.

நிகழ்ச்சி நிரல்

11.00. இறை வணக்கம்.
11.05 வரவேற்புரை: திரு. பாமா. மனோகரன் தலைவர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் 
11.10. தலைமை உரை: திரு. பாரதி மணி எழுத்தாளர் மற்றும் திரைப்பட நாடகக் கலைஞர் பெங்களூரு, அவர்கள்.
11.20: திருமதி சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தல்: திரு. சு. கிருஷ்ணகுமார்  திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
11.25: வாழ்நாள் சாதனையாளர்  விருது மற்றும் விருதுக்கான காசோலை  வழங்கிப் பாராட்டிப் பேசுபவர்: திரு. திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியர் அமுத சுரபி சென்னை  அவர்கள். 
11.40: வாழ்த்துரை:
பேராசிரியர். M A சுசீலா எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர். மதுரை
திரு  T விப்ர நாராயணன் தலைமை ஆசிரியர் இந்து மேல்நிலைப் பள்ளி சென்னை
திரு மோகன் கிருஷ்ணமூர்த்தி காந்திய சிந்தனையாளர் சென்னை
திருமதி. S.A பத்மாவதி (MAA) எழுத்தாளர். சென்னை.
திரு சந்தியா நடராஜன். பதிப்பாளர்.சென்னை
திரு R.ரவீந்திரன் சமூக ஆர்வலர் RAAC கோவை.
கவிதாயினி திருமதி தேனம்மை இலட்சுமணன் கரூர்
திரு. R.T தீர்த்தாரப்பன் தென்காசி ( TKC அவர்களின் கொள்ளுப் பெயரன்)
திரு.வே. முத்துக்குமார்.எழுத்தாளர்  நெல்லை.
12.10: திருமதி சுபாஷிணி அவர்களின் ஏற்புரை
12.25: நன்றியுரை திரு. B. V செந்தில் குமார் செயலாளர் திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
12.30. விழா நிறைவு.

புதன், 2 ஏப்ரல், 2025

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

சனி, 1 மார்ச், 2025

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

  என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!! எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி,...