எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர், கணேஷ் ஐ ஏ எஸ்ஸின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர், இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியானதும் முதலில் வந்து வாங்கிப் பாராட்டியவர். 

காரைக்குடி அழகப்பா பல்கலையின் ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியவர். எப்போதும் உள்ளம் நிறைந்த புன்னகை மலர்ந்த அவர் முகத்தைப் பார்த்தாலே நம் உடலிலும் மனதிலும் எனர்ஜி ஏறிவிடும். 

எனது காதல்வனம் நூல் வெளியீட்டிலும் அவர் கலந்து கொண்டு பொன்னாடை எல்லாம் போர்த்தி வாழ்த்தினார். அந்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். 


திங்கள், 11 மார்ச், 2024

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

 என்னுடைய காதல் வனம் நூல் வெளியீட்டு விழா கடந்த 2019 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது. அன்றே இன்னொரு கவிதை நூலும் வெளியானது. அது அமீரகத்திலிருந்து தமிழ்த்தேர் என்றொரு இணையத்தை நடத்திக் கொண்டு அதே தமிழ்த்தேர் என்றொரு அச்சு இதழையும் வெளியிட்டு வரும் திரு காவிரி மைந்தன் அவர்களின் கவிதை நூல்தான் அது. மிகப் பெரும் சைஸில் வெளியிடப்பட்ட அந்நூலைப் பற்றி நான் முன்பே நூல் பார்வை எழுதி இருக்கிறேன். 


நிகழ்வில் திரு காவிரி மைந்தன் & பதிப்பாளர், புத்தக நிலைய அதிபர் திரு.வேடியப்பன்.

முதலில் என்னுடைய காதல் வனம் நூலை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள் திரு காவிரி மைந்தன், திரு வேடியப்பன், திருமதி மணிமேகலை மணி ( சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் ), திருமதி மணிமேகலை சித்தார்த், திரு. இளங்கோ, செல்வி. கவிதா சொர்ணவல்லி மற்றும் என் கணவர் :) 

அடுத்துக் காதல் பொதுமறை நூல் வெளியீட்டு விழா. 

இந்நூலை நமது செட்டிநாட்டின் ஆசிரியர் திரு. ஆவுடையப்பன் நடராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியைத் திருமதிகள் -  மணிமேகலைகள் பெற்றுக் கொண்டார்கள். 

அடுத்த பிரதியை திருமதி கலையரசி அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். 
இல்வாழ்க்கையின் அன்பின் நிகழ்வுகளைக் காதல் காவியங்களாக ஆக்கி அளித்திருக்கும் காவிரி மைந்தனவர்களின் காதல் பொதுமறை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  

காதலர் தினத்தில் மட்டுமல்ல. இந்தக் காதல் பொதுமறையை வாழ்வு நெடுக இல்லற நெறியாகக் கைக்கொண்டால்  இதயங்கள் இனிமையில் நிரம்பும். வாழ்வு வசந்தமாகும். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் பேரன்பு. 

சனி, 3 பிப்ரவரி, 2024

காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ

காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ

 காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ


செவ்வாய், 2 ஜனவரி, 2024

தலைவி தந்த அண்ணல்.

காதல் வனம் நூல் வெளியீட்டின் போது எனக்கு முழு ஊக்கம் கொடுத்தவர் அன்புத் தோழி மணிமேகலை அவர்கள். இவர் சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத்தலைவி மற்றும் தலித் பெண்கள் நலச் சங்கத்தலைவி. இரு முறை சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர்  கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் அமர வைத்தவர். 

நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப் “ பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர். 

அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் தொகுத்து வரும் மகளிர் தினத்தில் நூலாக்கம் செய்யவிருக்கிறார். அந்நூலை உங்களைப் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன். 

என் புத்தக வெளியீட்டில் என்னைச் சிறப்பு செய்த அவருக்கு நாங்களும் ஒரு பொன்னாடை போர்த்தி மகிந்தோம்.


எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர். மிகக் கூச்சத்தோடு ஏற்றுக் கொண்டார் :) 

சனி, 2 டிசம்பர், 2023

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

 சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பனை 2009 இலிருந்தே தெரியும். அவர் புத்தக நிலையம் ஆரம்பித்த புதிது. அப்போது அகநாழிகையின் புத்தக வெளியீடு. நாகரத்னா பதிப்பகம். லாவண்யா சுந்தராஜன், பாரா ஆகியோரின் நூல்கள் வெளியாகின. 

அதன் பின் கேபிள் சங்கர் & பரிசல் கிருஷ்ணா ஆகியோரின்  நூல் வெளியீடு அங்கே மாடியில் நடந்தது. அரங்கம் கொள்ளாத வலைப்பதிவர் கூட்டம். இதுவரை மூன்றுமுறை தன் தோற்றத்தைப் பொலிவு படுத்திக் கொண்டது டிஸ்கவரி. 

சகோ வேடியப்பனைச் சந்திக்கும்போது அவர் தன் வலைப்பதிவு பற்றிக் கூறினார். மதிவதனி கைக்குழந்தை. அதன்பின் அவரது சகோதரன் சஞ்சயின் திருமணம். வேடியப்பன் மகன், சஞ்சயின் பிள்ளைகள் என அவர்கள் குடும்பத்தினர் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 2012 இலேயே நான் சென்னையிலிருந்து வந்துவிட்டாலும் அவ்வபோது முகநூல், கைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். 

இதுவரை வெளியான பதிமூன்று நூல்களில் எனது எல்லா நூல்களும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எனது முதல் நூல் நண்பர் செல்வகுமாரின் மூலம்  கரிசல் மீடியாவால் ( மகேந்திரன் )  பதிப்பிக்கப்பட்டது. ஆனால் வெளியீடு 36 ஆவது புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரியின் அரங்கில்தான். மாபெரும் கூட்டம். ஓரளவு நல்ல விற்பனையும் கூட. அதன் தொகையையும் எனக்கு அவர் அப்படியே கொடுத்தார். 

எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறை அவரே வெளியிட்டார். கிருஷ்ணப் ப்ரபு அவர்களின் எடிட்டிங்குடன் அந்நூல் சிறப்பாக வெளிவந்தது. டிஸ்கவரியின் க்ளாசிக் நூல் பிரிவில் வெளிவந்த அதை கிருஷ்ணப் ப்ரபு “இந்நூல் வெகு ஜனம், மற்றும் இலக்கியம் இரண்டுக்கும் நடுவில் ஒரு தடத்தில் பயணிக்கிறது. நல்ல ரீச் ஆகும் என்றார்.” அதன்படியே அந்நூல் இரண்டாவது பதிப்பும் கண்டது.

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...