மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
மல்லை, கடல்மல்லை, மாமல்லை என்று பண்டைய வைணவப் பாசுரங்களில் குறிக்கப்பெற்ற இத்தலம் காஞ்சிப் பல்லவர்களின் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கே காணப்படும் கற்கோயில்கள் அனைத்தும் ஊர் நடுவேயுள்ள ஜலசயனப் பெருமாள் ஆலயத்தைத் தவிர பல்லவ மன்னர்களின் சிறந்த படைப்புகளாகும்.
மாடச் சிற்பங்களில் விஸ்தாரமானதாகக் கருதப்படுகிற அர்ஜுனன் தவம் என்னும் சிற்பக் கருவூலமும், கிருஷ்ண மண்டபச் சிற்பமும் மாமல்லன் காலத்துக்குரியதாகும்