நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.
ஒரு வாரம் பொள்ளாச்சி நிவேதா இன்னில் தங்கும் சந்தர்ப்பம் அமைந்தது. இது காந்தி ரோட்டில் இருக்கு. இதன் கீழேயே நமக்கு மிகவும் பிடித்த கௌரி கிருஷ்ணா ஹோட்டல். இந்தக் காப்பிக்காகவே இங்கேயிருந்து கிளம்பவே பிடிக்கலை.
ரூம் வாடகை இருவருக்கு ரூ990/- தான். அதுனால இங்கே காலையில் பஃபே எல்லாம் கிடையாது. ஆனால் கீழே தோசைரோஸ்டும். அதன் பக்கவாட்டில் இருக்கும் குட்டி ஹோட்டலில் இருந்து தயிர்வடையும் ராகி வடையும் காஃபியும் ஆஹா ஓஹோதான். இங்கே உள்ள உணவுகள் பத்தி தனி இடுகை போடுகிறேன் பின்பொருமுறை.
சில தினங்களைக் கறுப்பு தினங்கள் என்பார்கள். இங்கே நிவேதா இன்னில் எல்லாமே வண்ணமயமான தினங்கள்தான். ஒரு வாரம் இருப்பதால் அங்கே டாப் ஸ்லிப், திருமூர்த்திமலை எல்லாம் போகலாம் என்றிருந்தோம். நவம்பர் எட்டு அன்று இரவு தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி ஐநூறு ஆயிரம் செல்லாது என்கிறார். ஒரே அல்லோல கல்லோலம்தான். அன்று நிறமிழந்த தினமாக இருந்தது.
சுற்றிலும் இருக்கும் ஹோட்டல்கள் , கடைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே பரபரப்பு. இருக்கும் ஐநூறு ஆயிரத்தை மாற்ற முடியாமல் சாப்பாடு அத்யாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமம்.ஆனால் நாம் யாரு சிறுவாட்டில் கில்லியாச்சே.
நிவேதா இன்ன் ஹோட்டலில் ரெண்ட் எல்லாம் கார்டு பரிவர்த்தனை. அதனால் பிரச்சனை இல்லை. ஆனால் புவா ??. ரங்க்ஸிடம் ஓரளவு இருந்தது. ஆனால் அவர் நண்பர் ஒருவருக்கு அத்யாவசியத் தேவை . அவரிடம் ஐநூறு ஆயிரம் தவிர வேறில்லை. என்னிடம் இருப்பதை சொல்லியாச்சு. உடனே அவசரத்துக்கு உதவணும் என்று சொல்லி இருந்ததில் கணிசமான நூறை ( நமக்கு வேணுமே என்று மொணமொணத்துக் கொண்டே , இன்னொரு பர்சிலும் சேமித்து வைத்திருந்தேன் :) ) கொஞ்சம் எடுத்துக் கொடுத்தேன்.
சொல்லப் போனா அந்த ஒரு வாரமும் நம் வாழ்க்கையில் வாங்கிய வைத்திருக்கும் தங்கம் வெள்ளி வைரம் கூடப் பொருட்டில்லை கொடுத்திருவோம் போல ஆனா நூறு, ஐம்பது ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிய விதம் இருக்கிறதே அப்பப்பா. நம்மை நமக்கு இனம் காண்பித்த நிகழ்ச்சி.
அது போக திருடன் வந்தா வால்யுபிள் எல்லாம் திருடாம ரூபாய் நோட்டைத் திருடிக்குவானோ என்று அதை பர்ஸுக்குள் போட்டு இன்னொரு பர்ஸுக்குள் போட்டு பேகில் மடித்து சூட்கேஸில் வைத்து நம்பர் லாக் போட்டு ஹிஹி இதெல்லாம் நாம்தான் செய்தது. ரூபாய் முக்கியமில்லா மக்கா. அப்பத்தானே அடுத்த வேளை புவா வாங்க முடியும். :) கீழே உணவு ஹோட்டல்காரர்கள் கார்டுக்கும் ஒப்புக்கல.
அதன் பின் நாம சுகமா சௌக்கியமா ஊர் வந்து சேர்ந்தோம். முடிந்தவரை தேவைப்பட்டவருக்குக் கொடுக்கவும் செய்தோம். ஆனா மனதுக்குள்ள நாம் எப்பிடிப்பட்ட ஆளுன்னா நமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்பது புரிந்துவிட்டது. :) :) :)
இப்போ நிவேதா இன்ன் பத்தி.
அங்கே ரிஸப்ஷனில் வரவேற்கும் விநாயகர். கெபி போன்ற அமைப்பு.
மிக விசாலமான அறைகள். முதலில் தங்கின ரூம் கீழே இருந்த கிச்சனுக்கு அருகில். அதனால் சத்தம் அதிகம் கேட்டது.