வலையில் எழுத ஆரம்பித்து அவை பத்ரிக்கைகளில் வெளியாகத் துவங்கியபின் சில பல வலையுலக திரையுலகப் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.
அவற்றுள் சில சந்திப்புகளை இங்கே பகிர்ந்துள்ளேன்.
சென்னை லாமிகிளில் எங்கள் முகநூல் நட்பு வட்டத்தின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நண்பர்களின் அன்பு அழைப்புக்கிணங்க இந்த வி ஐ பி வந்திருந்தார்.
அதற்கு முன்பே முகநூல் வலைத்தளப் பகிர்வுகளில் ஆச்சியின் தீபாவளிப் பலகாரங்கள் அட்டகாசம் என்று கருத்துரை நல்கியிருந்தார்.
நல்ல படங்களின் மூலமே அறிந்திருந்த மிகவும் எளிமையான இந்த மனிதரைச் சந்திப்போமென்று நினைக்கவேயில்லை.
அனைவருடனும் உரையாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நண்பர் இயக்குநர் சேரன். அதன்பின்னும் சிலமுறை நட்புவட்டங்களிலும் விசேஷங்களிலும் சந்தித்திருக்கிறோம்.
இதில் இருக்கும் விஐபிக்களின் லிஸ்ட் பெரிது. அனைவரும் நண்பர்கள் என்றாலும் எழுத்தாளர் மதுமிதா, மென்சஸ் குறும்படம் எடுத்த கீதா, இயக்குநர் மாகி, டெக்கான் க்ரானிக்கிள்ஸ் எடிட்டர் பாகி, இயக்குநர் நவீன், நடிகர் நிதீஷ்குமார் ஆகியோருடனான சந்திப்பு நம்மவீடு வசந்தபவனில் நிகழ்ந்தது..