எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஜூன், 2026

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.


இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-

ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.

************************************************

கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம்:-
******************************************************
அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.

சனி, 27 ஜூன், 2026

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

வியாழன், 25 ஜூன், 2026

அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்

அன்ன பட்சியும் கயல்விழிஷண்முகமும்

தேனக்கா....

முகநூலில் கிடைத்த நல்ல நட்பு.

நிறைய பகிர்ந்திருக்கிறோம். நிறைய பேசியிருக்கிறோம்.

படபடவென பேசி அதே வேகத்தில் பாசத்தால் திக்குமுக்காடச் செய்யும் அன்பின் அருவி Thenammai Lakshmanan

தனது அன்னப்பட்சி நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். கவிஞர் என்ற அடைமொழி சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. நானும் இரவெல்லாம் கண்விழித்து எழுதி வைத்திருந்தேன். மறுநாள் அகநாழிகை பதிப்பகத்தில் நிகழ்ச்சி. தமிழச்சி,தேனக்கா,வாசு என்று மனதிற்கு நெருங்கிய நட்புகள் தானென்றாலும் மெல்லிய பதட்டம் இருந்தது. அதை மீறிய மகிழ்வு. கல்லூரி நாட்களுக்குப் பின் இலக்கியம் பேச ஒரு வாய்ப்பென்பதிலும் கணவரும் உடன் வருவார் என்கிற துள்ளலும்.

செவ்வாய், 23 ஜூன், 2026

நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.

நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.

மேலே நீங்கள் பார்க்கும் போட்டோவில் இருப்பவர்கள் தோழி தேனம்மையும், கயல்விழியும்.
 ஒரு இரண்டு மூன்று மாதம் முன்பு எதேச்சையாக இந்த போட்டோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஒரு ஈர்ப்பு இதில் ஏதோ ஒன்று இருப்பதை போல தோன்றியது.

ஞாயிறு, 21 ஜூன், 2026

காலைத் தென்றலில் கயலும் நானும் :-

காலைத் தென்றலில் கயலும் நானும் :-


https://www.youtube.com/watch?v=JdGZE5h1v-A&t=13s


பொதிகையின் காலைத்தென்றல் நிகழ்ச்சியில் என் அன்புத்தங்கை கயல்விழி லக்ஷ்மணன் பேட்டி அளித்துள்ளார். அதில் திறனாய்வாளாராகவும் நிகழ்ச்சி மேலாண்மையாளராகவும் தனது பணி பற்றிக் கூறியுள்ளவை சிறப்பானவை.

இதில் அவர் பேட்டி மட்டும்தான்  வந்துள்ளது. நான் எங்கே வந்தேன் என்று கேட்கின்றீர்களா. பேட்டியின் முதலிலும் நடுவிலும் என் பெயரை உச்சரித்துள்ளார் அதனால் இங்கே பெருமையாகப் பகிர்ந்துள்ளேன்.

கிங் மேக்கர் மாதிரி க்ரிட்டிக் மேக்கரும் சிறப்பான பணியே என்று உணர்ந்த நாள் இன்று. ஹாஹா சுய பாராட்டு. மன்னிச்சு விட்டுருங்க :)

அன்பும் நன்றியும் கயல் &  காலைத் தென்றல். :

மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-

மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.



மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-

வியாழன், 18 ஜூன், 2026

பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.

பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.


போரூரில் நடந்த பட்டிமன்றத்தில் நல்ல நடுவராக தீர்ப்பு வழங்கியவர் என்று பாராட்டப்பட்டவர்., பள்ளிக்காலங்களில் கல்லூரிக் காலங்களில் பட்டி மன்றத்தைக் கலக்கியவர்., தற்போதும் அம்பத்தூரில் நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் , ”நம் சமுதாயம் முன்னேற பெரியோரின் அனுபவம் தேவையா அல்லது ஆற்றல் மிக்க இளைஞர்கள் தேவையா” என்ற பட்டிமன்றத்தில்
பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை...

புதன், 17 ஜூன், 2026

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்..

சனி, 13 ஜூன், 2026

எனர்ஜி பூஸ்டர் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேடம்

எனர்ஜி பூஸ்டர் ஸ்ரீ சக்தி மணிமேகலை மேடம்

 சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத் தலைவி &  தலித் பெண்கள் நல சங்கத் தலைவி மணிமேகலை மேடம் என் நலம் விரும்பி.எப்போது நான் புத்தகம் வெளியிட்டாலும் உடன் வந்து தோள் கொடுப்பார். என் முதல் நூல் சாதனை அரசிகளில் இடம் பெற்ற சாதனை அரசி இவர். மனித நேயம் மிக்கவர். 

இவர் எங்கே இருந்தாலும் அங்கே பாஸிட்டிவ் வைப்ஸ் இருப்பதை நாம் உணரலாம். அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியும். இவர் தற்போது ஒரு நூல் எழுதி வருகிறார். அதன் வெளியீடு விரைவில் இருக்கும். 


வியாழன், 11 ஜூன், 2026

உரத்த சிந்தனை - 2017 இல் உங்கள் பங்களிப்பு.

உரத்த சிந்தனை - 2017 இல் உங்கள் பங்களிப்பு.

சிகரங்கள் நமக்குத் தூரமில்லை
சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை.

-- என்ற கேப்ஷனோடு வெளியாகவிருக்கிறது உரத்த சிந்தனையின் 33 ஆம் ஆண்டு மலர் ( 12. 3. 2017 அன்று ).

புதன், 10 ஜூன், 2026

கவிஞர் ஆத்மாநாம் விருது.

கவிஞர் ஆத்மாநாம் விருது.

விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன், 

விழா சிறக்க வாழ்த்துகள் ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம். 


////கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2016.

செவ்வாய், 9 ஜூன், 2026

யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..

யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..

அன்பின் சகோதரிகளே..
உங்க மற்றும் உங்க டீனேஜ் மகளின் குட்டிக் கவிதைகளை SMS அல்லது email மூலம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் இனிவரும் நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில்... உங்களுக்காக...

ஞாயிறு, 7 ஜூன், 2026

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடத்தும் குறுநாவல் போட்டி பற்றிய விபரம்

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.


போட்டிகள் பற்றிய பொது விதிகள்

வெள்ளி, 5 ஜூன், 2026

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

 அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

எனது முகநூல் நண்பர் திரு கந்தையா முருகதாசன் அவர்களின் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.

( திரு கந்தையா முருகதாசன அவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகிறார்கள். பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அங்கத்தினர். மிகச் சிறந்த எழுத்தாளர், பண்ணாகம் இணையதளத்தில் இவரது படைப்புகளை வாசிக்கலாம். எந்த நிகழ்வுகளிலும் தன்னை முன்னிறுத்தாத எளிமையாளர் , . மனம் திறந்து மற்றவர்களைப் பாராட்டும் பண்பாளர். )

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து பரிசு பெறணுமா. பின் வருவதைப் படிச்சுக் கலந்து வெற்றி வாகை சூடுங்க. வாழ்த்துகள். :) போட்டியைப் பகிர்ந்தமைக்கு நன்றி முதுவை ஹிதயத்துல்லா சார் .

 

////மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்


காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் -

கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1
பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.

பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

நாள்- 28.1.2017
நேரம் 0 9.30 மணி
இடம்- கிருஷ்ணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி

எதிர்பார்க்கும் தகுதிகள்

உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும் சிறப்பான தேர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முதற்பரிசு- ரூ 1000
ஊக்கப்பரிசுகள் - பங்கேற்கும் ஐவரில் ஒருவருக்கு என ஒவ்வொருவருக்கும், ரூ 250

போட்டிக்குரிய பகுதி

அயோத்தியா காண்டம் பள்ளிப்படை படலத்தில் 22 பாடல்கள்
மைஅறு மனத்து என்று தொடங்கும் பாடல் முதல் தூய வாசகம் சொன்ன என்று தொடங்கும் பாடல் முடிய

----------------------------------------------------------------

கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி -2

6,7,8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

முதற்பரிசு ரூ1000

ஊக்கப்பரிசு - போட்டியில் பங்கேற்போரில் ஐவருக்கு ஒருவர் என ஒவ்வொரு வருக்கும் 250 ரூபாய்

மனப்பாடப்பகுதி

திருஅவதாரப்படலத்தில் 22 பாடல்கள்
மாமணி மண்டபம் மன்னி என்று தொடங்கும் பாடல் முதல் எந்தை நின் அ்ருளினால் என்று தொடங்கும் பாடல் வரை.

-------------------------------------------------------

குறிப்பு
1. பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் இருவர் மட்டுமே உரிய அனுமதியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

2. மனப்பாடப்பகுதி வேண்டுவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்க.

கம்பன் கழகம்
சாயி 1. ஈ செட்டிநாடுடவர்ஸ்,
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
-----------------------------------------------------

பிற தொடர்பிற்கு
9445022137
---------------------------------------------
கம்பராமாயணப் பேச்சுப் போட்டிகள்

தமிழக அனைத்துக் கலை அறிவியல் , பொறியியல், தொழில் நுட்ப கல்வியியல் கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி - 2016-17

போட்டி நடக்கும் நாள் - 28-1-2016
இடம் - காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு

போட்டி -1 கம்பராமாயணப் பேச்சுப் போட்டி

காலை 10 மணி முதல்

முதற்பரிசு ரூ 3500

பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள அவரின் தாயார் வேம்பு அம்மாள் நினைவுப் பரிசு

இரண்டாம் பரிசு ரூ 1000

திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு

ஊக்கப்பரிசு ரூ 500 இருவருக்கு

தலைப்பு

1 கம்பனில் மனித நேயம்
2. கம்பனில் மனித உணர்வுகள்
3. கம்பனில் மனித ஆற்றல்

இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்

போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.

சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது. 
 
திருக்குறள் பேச்சுப் போட்டி

முதற்பரிசு ரூ 3500

பேராசிரியர் சரசுவதி இராமநாதன் அவர்கள் நிறுவியுள்ள அவர்தம் கணவர் புலவர் க.வே. இராமநாதனார் நினைவுப் பரிசு

இரண்டாம் பரிசு ரூ 1000

திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு

ஊக்கப்பரிசு ரூ 500 இருவருக்கு

தலைப்புகள்

1. கல்வி , கேள்வி
2. அறிவு - பணிவு
3. ஆண்மை- பேராண்மை

இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்

போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.

சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.
---------------
மாணவர்கள் கலந்து கொள்ளுங்கள்

பார்வையாளராக நீங்கள் வாருங்கள்

தமிழறிஞர்கள் நடுவர்களாக வாருங்கள்

அனைவரையும் அழைக்கிறோம்

வருவதற்கு முன்னால் வரும் விபரம் தெரிவித்தால் பிற ஏற்பாடுகள் குறைவின்றிச் செய்ய இயலும்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க வாருங்கள்.

இதனை அன்புடன் பகிருங்கள்
உங்கள் ஊரில் கம்பன் கழகம் வளரும்

இதனை அன்புடன் இணையத்தில் பரப்புங்கள்
முடியும் உங்களால் முடியும்

நாடு முழுக்க கம்ப காவியம் நிலைக்கும்

கம்பன் வாழ்க
கம்பன் புகழ் வாழ்க
கன்னித்தமிழ் வாழ்க
 

புதன், 3 ஜூன், 2026

ஃபெட்னாவின் வெள்ளி விழா மலருக்கு படைப்புக்கள் அனுப்ப.. (FETNA )

ஃபெட்னாவின் வெள்ளி விழா மலருக்கு படைப்புக்கள் அனுப்ப.. (FETNA )

அமெரிக்காவில் வசிக்கும் தோழி விஜி சத்யா அவர்களுக்கும், வலைப்பதிவர் பழமை பேசிக்கும் முதலில் நன்றிகள். முகநூல் நண்பர் நாகூர்கனி காதர்மொஹ்தீன் பாஷா அவர்களுக்கும் நன்றிகள். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை மார்ச்சுக்குள் அனுப்பி வையுங்கள். அதன் வெள்ளிவிழா மலரில் உங்கள் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இடம் பெறும்.

/////தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா - படைப்புகள்

வணக்கம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழாவானது, முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக எதிர்வரும் சூலை 6. 7. 8 ஆகிய நாட்களில், பால்டிமோர் சமூக அரங்கில் எழுச்சியோடும் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்படவிருக்கிறது. வெள்ளி விழா குறித்துக் கூடுதல் விபரங்களைப் பெற பேரவையின் வலைதளத்தினைப் பாவிப்பீர்களாக!
இணைப்பு

செவ்வாய், 2 ஜூன், 2026

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் என்ற போட்டிக்குக் கவிதை/ கதை/கட்டுரை அனுப்பி பரிசை வெல்லுங்க . வாழ்த்துகள் மக்காஸ். 
///////காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம். முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம். ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள...