எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும். MY CLICKS.

மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும். MY CLICKS.

அடி மஞ்சக்கிழங்கே என்ற பாட்டு ஞாபகம் வந்தது இந்த மஞ்சள் மீனைப் பார்த்ததும்.
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா கிருஷ்ணா என்ற தசாவதாரப் பாடல் நினைவுக்கு வருதுல்ல :)  அலமாரில ஒட்டுற மாக்னெட் கிருஷ்ணா. கிளியைப் பார்க்கும் கிருஷ்ணா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது :)

வெந்நீர் வைக்கிற ஹாட்வாட்டர் ஜக். என்னோட ட்ராவல் ஃபேவரைட். அதான் எடுத்தேன். அதோட லஞ்ச் பாக்ஸும் ஜிப்பர் பேக்ஸும்.

குன்றக்குடி சுப்புலெட்சுமி அழகாக அமைதியாக தெய்வீகமாகக் காட்சி அளித்தபோது.
திருக்குறள் கழகத்தினர் ஆண்டு விழாவின் போது பரிசளிக்க வைத்திருந்த திருவள்ளுவர்கள்.
மெய்யாலுமே நான் எடுத்ததுதான். வல்லக்கோட்டையில் எடுத்தேன். அங்கே கோயிலில் மயில்கள் கொஞ்சி விளையாடுகின்றன. தானியம் அளித்தால் கொத்திச் சுவைக்கின்றன. முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக போஸ் கொடுக்கவேறு செய்தாங்க !
மயில் வந்தவுடன் குயிலும் கூட. இது ஜெர்மனியில் இருந்து வந்த குக்கூ கெடிகாரம். மணிக்கொரு தபா அந்தக் குயில் வந்து நான் உன்கூட இருக்கேன்னு கூவிட்டு வீட்டுக் கதவை பத்திரமா சாத்திக்கும். :)
குன்றக்குடி ஷண்முகநாதர் கோயில் முன்புற ஆர்ச். சண்முகநாதர் அறுமுகத்துடன் வீற்றிருக்க இருபுறமும் வள்ளி தெய்வயானை அருள் பாலிக்க அவர்களின் இரு புறமும் நீளத்தோகை கொண்ட மயில்கள் காவலாய் நிற்கின்றன. வண்ண வளைவு.
தம்பி வரும்போது அண்ணனை எப்பிடி விடுவது. காரைக்குடி ஃபைவ்லாம்ஸ் அருகே கோயில் கொண்டிருக்கும் விநாயகர்.
டிஸ்கவரி புக் பேலஸில் பார்த்த ஞாபகம். இந்த ஓவியங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஒரு வீட்டின் வாயிலில் வண்ண மயில் தோகையை விரித்துக் கிடந்தது. மார்கழிக் கோலம். இரவில் எடுத்ததால் கலைந்திருக்கிறது.
அதென்னவோ தெரியல. ஒரு ஹாஸ்பிட்டலின் வெளிப்புறம் இருந்த மரத்தில் கண்ணாடி வளையல்களைக் கட்டி இருந்தார்கள். சீமந்தம்/வளை காப்பு நடக்கும்போதோ அல்லது பிரவத்தின்பின்போ இப்படி செலுத்துகிறார்களா தெரியவில்லை. உறவினர் ஒருவரின் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது இந்த விந்தைக் காட்சியைக் கண்டேன். மரத்தடியில் சாமி எதுவும் இல்லை. மரமே சாமி.
அதே குன்றக்குடி சுப்புதான். இன்னொரு கோணத்தில் இன்னொரு நாள் படி இறங்கும்போது எடுத்தது.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்8 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:05

    அனைத்தும் அழகு சகோதரி...
    பதிலளிநீக்கு
    G.M Balasubramaniam8 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:02

    திருவநந்த புரத்தில் இம்மாதிரி வெளியே வந்து கூவும் குயில் மணிக் கூண்டு பார்த்திருக்கிறேன்
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu8 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 4:23

    அனைத்தும் அழகு! அதிலும் சுப்புவும் கோல மயிலும், மயிலும் அருமை!!!
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:36

    நன்றி டிடி சகோ

    நன்றி பாலா சார். நான் ஹைதையில் நிஜாம் கலெஷனில் பார்த்திருக்கிறேன் :)

    நன்றி துளசி சகோ :)
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:36

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...