எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 ஜனவரி, 2021

பூ ,பூவை, பூஜை.

பூ ,பூவை, பூஜை.

தூர்தர்ஷனில் சில வருடங்களுக்கு முன்பு குல், குல்ஷன், குல்ஃபாம் என்றொரு தொடர் இடம் பெற்றது. இதற்கு பூ பூவை பூங்கா என்று பெயர்.

இங்கே நான் எடுத்த பூ  பூவை ( ஒரே ஒரு படம். ) பூஜை பற்றிப் படங்கள்.

லாப்டாப்ல மிச்சமிருக்க புகைப்படத்துக்கெல்லாம் பொருத்தமா ( சேர்த்துக் கோர்த்து )  ஏதும் பேர் வைச்சிடணும்ல. அப்பத்தானே ப்லாகில போடலாம்.

ஒரு  திருமண மண்டபத்தில்  வரவேற்பு நிகழ்ச்சியில். ரோஸ்தானே இது. வித்யாசமா இருக்கில்ல. நடுவுல வட்டமா இருக்கது சாமந்தி.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயிலில்  உறவினர் ஒருவரின் எழுபதாம் நிகழ்வில் பூஜைக்காகக் காத்திருந்த  இரட்டைத் தாமரைகள்.
அங்கேயே எடுத்த ஆறு தாமரை மொட்டுகள். பக்கத்தில் ஆயிரம் தாமரை இதழ்கள். :)
திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் உறவினர் இல்லத்தின் முகப்பில் அலங்காரப் பூக்கிண்ணம்.
சோழபுரம் இல்லத்தில் அலங்காரப் பூக்கிண்ணம். இட்லிப் பூவும் ரோஸ் அரளிப் பூக்களும். வித்யாசம்.



சோழபுரம் பங்களாவில் ஒரே செடியில் பூத்த ஏழு ரோஜாக்கள்.
இது ஃஃபேன்ஸி பூக்கூடை & அர்ச்சனைத் தட்டு. பூ வந்தால் பூக்கூடையும் அர்ச்சனைத்தட்டும் இல்லாமலா. எடுத்து வைக்கணும்ல :) வீட்டில் விசேஷ சமயங்களில் உபயோகிப்பது. வெள்ளி இல்லை. வொயிட் மெட்டல் மாதிரி ஏதோ ஒண்ணு.

முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பால்குடத் திருவிழாவில் பூத்தட்டு.
ஊனையூர் முத்துவெள்ளை சாத்தையனார் கோயிலின் மையத்தில் உச்சியில் பூத்த கல்தாமரை. :) வேண்டுதல் தொட்டில்கள், மணி. 
நாட்டரசன் கோட்டையில் எங்கள் பாட்டரசன் கம்பனின் சமாதியின் முன்பு பூக்களை அடுக்கி வைக்கும் பூவையர்கள். அத்தத் திருநாள் அன்று.
ஓம்காரேஷ்வரர் மமலேஷ்வரர் கோயிலில் தம்பி குடும்பத்தாருடன்  பூஜை செய்தபோது எடுத்தது.
வீட்டுப் படைப்பு - மல்லிகைப் பூக்காடு. :)
சோழபுரம் இல்லத்தில் முற்றத்தில் விநாயகர் எதிரில் இருந்த அலங்காரப் பூக்கிண்ணம். இட்லிப் பூக்களும் சாமந்திகளும் ( கிருஷாந்தி போலத் தோணுது, ) மஞ்சள் ரோஜாக்களும் .
சோழபுரம் இல்லத்தில் பூக்கிண்ணம் துளசி மாடம் முன் இருக்க யானை வாகனத்தில் கொலு வீற்றிருக்கும் தங்க விநாயகர்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்29 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:51
    அழகோ அழகு...

    பதிலளிநீக்கு

    மாதேவி29 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:40
    பூ பூவாய் பூத்திருக்கு......

    பிடித்து தொகுத்தஉங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:40
    நன்றி டிடி சகோ

    நன்றி மாதேவி :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:41
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்30 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:49
    அழகிய படங்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...