எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 மார்ச், 2021

குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் GWALIOR SURBHI HOTEL.

குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் GWALIOR SURBHI HOTEL.

ஹோட்டல் சுரபி மத்யப் பிரதேஷ், குவாலியரின் மையப்பகுதியில் நயா பஜார், லஷ்கர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கே வெய்யில் சும்மா கொளுத்தோ கொளுத்துன்னு கொளுத்தித் தள்ளிடுச்சு. யோகாசனத்துல இருக்க ஸததி, ஸதந்தா  ஷீதளி, பிராணாயாமம் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன் ஏசி ரூமிலும் ! துணியை துவைச்சு பால்கனில போட்டா பத்து நிமிஷத்துல சுக்கா காஞ்சிடும்.
ஒரு மூணு நாள் இங்கே தங்கி குவாலியர் கோட்டை, அங்கே இருக்குற சாஸ்பஹு மந்திர், குருத்வாரா எல்லாம் பார்த்தோம்.




எல்லா ஹோட்டல்களும்போல ஏசி, டிவி, இண்டர்காம் பாத்ரூமில் வெந்நீர் வசதி எல்லாம் உண்டு.


டெய்லி ரூம் க்ளினிங்கும் உண்டு.
கதவின் கொக்கி வித்தியாசமாய் கவர்ந்தது அதான் எடுத்திருக்கிறேன்.
ரிசப்ஷனில் பாண்டுரங்க விட்டலன்,
ராதாகிருஷ்ணா
தியான சிவன்
துள்ளும் மீன்கள்
நாமதேவ், விதோபா, துக்காராம் அழகூட்டினார்கள். 
ரங்க்ஸின் நண்பர் இல்லத்திலிருந்து தினம் காலை டிபன் வந்தது. அதில் ஒரு நாள் ப்ரெட் வெஜ் டிக்கியும் இருந்தது செம ருசி
அங்கே உள்ள ஹோட்டலில் ஒருநாள் இரவு உணவு வாங்கி வந்தார். தோசை, சட்னி சாம்பார். எல்லாம் கிடைக்குது ஆனால் சாம்பார் ரசம் மாதிரி இருக்கு. அதையும் கெட்டுப்போன தேங்காய் சட்னியையும் ( நம்ம நாக்குக்கு எல்லாம் தெரிஞ்சிருமே ) அங்கே ஸ்பூனில் .மொண்டு மொண்டு குடிக்கிறார்கள் என்று சொன்னார். தோசை பரவாயில்லை. எது தோசைன்னா கேக்குறீங்க. அங்க டீ பாக்கெட் பாக்கிங்கில் இருக்கதுதான்.
இன்னொருநாள் ஸுரபியில் இந்த ஷாஹி பனீர் வித் தந்தூரி ரொட்டி சாப்பிட்டோம். எனக்காக வாங்கியது அதுனால ரங்ஸ் ஊறுகாய் வைச்சு சாப்பிட்டார். அவருக்கும் பனீருக்கும் ஜென்மப் பகை. அதுனால நான் அதை மறுநாள் காலையில் எழுந்ததும் பல்லை தேச்சுட்டு மிச்சம் இருந்ததையும் சாப்பிட்டேன். செம டேஸ்ட். மாட்டுலேருந்து பாலை கறக்கும்போதே பனீரா லட்டு லைட்டா திரைச்சு எடுத்துடுறாங்களோ என்னவோ. ஐயா எல்லாம் எனக்கே எனக்குத்தான் :)

அடுத்தநாள் ரங்க்ஸோட நண்பர் வீட்டிலிருந்து இன்னும் பிளசண்ட் சர்ப்ரைஸ். வடை சாம்பார் சட்னி வந்திருந்தது.  அதோட ஒன்ரவண்டி ஜலேபி. அத பால்ல போட்டு சாப்பிடலாமாம். ஜூடா புலிப்பா இருந்தது. டெல்லில சாப்பிட்டிருக்கோம். அதன்பின் இங்கேதான்.

அப்புறம் ஒரு விஷயம் இந்தூர்ல சப்பை சப்பையா மாங்கா விக்கிது. அது ரொம்ப நல்லா இருக்கும்போல. அதுக்கு ஏகக் கிராக்கி. அதுல எதோ சப்ஜி பண்ணி ரொட்டிக்குத் தொட்டுக்குவாங்க போல.

இங்கே இன்னும் ஒரு விஷயம். என்னன்னா புளிப்பு ரொம்ப பிடிக்கும்போல. ரயில்வே ஸ்டேஷன் ல நம்மூர் காபி பொடி விளம்பரம் மாதிரி தக்காளி கெச்சப் தக்காளி சாஸுக்கு ஏக விளம்பரம். அததான்  அதிகம் சாப்பிடுவாங்க போல இருக்கு.

அருமையான உணவு தந்த ரங்க்ஸ் அலுவலக நண்பருக்கும் சுரபிக்கும் தாங்க்ஸ் சொல்லிட்டுப் புறப்பட்டோம் போபாலை நோக்கி. அங்கே ஜி ஷை பத்தி சொல்றேன்.

இப்போ இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள்.



1 கருத்து:

  1. Thenammai Lakshmanan10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:22
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...