எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 டிசம்பர், 2024

ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனால் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  எகனாமி ஸ்டே.


சனி, 2 நவம்பர், 2024

ஹோட்டல் ராயல் ரீஜன்ஸியில் இரு நாட்கள்

சென்ற வருடம் சென்னை சென்றிருந்த போது பூந்தமல்லி ஹைரோட்டில் இருக்கும் ராயல் ரீஜன்ஸியில் இருநாட்கள் தங்கி இருந்தோம். மிக வசதியான ஹோட்டல். 


கார் பார்க்கிங், வைஃபை, டிவி , ஏசி எல்லாம் உண்டு. 

வியாழன், 3 அக்டோபர், 2024

ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.

ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள்.

 சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியான அகாமடேஷன் மற்றும் உணவுகள். அவை பற்றிப் பார்க்கலாம்.


முகப்புத் தோற்றம். 

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

 

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

அழகப்பா பல்கலையில் நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் 36 தமிழ்க் கவிதாயினிகள் கலந்து கொண்டோம். அதில் நாச்சியாளும் ஒருவர். பத்ரிக்கை நிருபர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் வாய்ந்தவர். 

இவர் என்னுடைய நூலைப் படித்து விட்டு விமர்சித்ததை இங்கே நான் கூறினால் நல்ல தட்டு எனக் கூறுவீர்கள். 

செவ்வாய், 2 ஜூலை, 2024

உணவுப் பழமொழிகளும், பயன்களும்

உணவுப் பழமொழிகளும், பயன்களும்

 நொறுங்கத்தின்றவனுக்கு நூறு ஆயுசு

உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டுலயும் சாப்பிடலாம்
சீரகம்= சீர் அகம் =  உடல்நலத்தை சீராக வைக்கும். 
சீரகம் இல்லா உணவும் சிறுகுழந்தை இல்லா வீடும் சிறப்பதில்லை.
காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
போன ஜுரத்தைப் புளியிட்டு அழைக்காதே
பொங்குற காலத்தில் புளி, மங்குற காலத்தில் மாங்கா
நெய்க்குடத்தைச் சுற்றிய எறும்பு போல
நெய் வயிற்று அக்கினியை அணைக்கும்
தன் காயம் காக்க வெங்காயம் போதும்
வாழை வாழ வைக்கும். 
வாழையடி வாழை
அவசரச் சோறு ஆபத்து
ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
முடக்கை நீக்குவது முடக்கற்றான் கீரை
வாய்ப்புண் நீக்கும் மணத்தக்காளி
இரப்பைப் புண்ணுக்கு எலுமிச்சைச் சாறு
ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராக்ஷை
சித்தம் தெளிய வில்வம்
சிறுநீர்க் கடுப்புக்கு அன்னாசி
சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு
மூலம் போக்கும் கருணைக்கிழங்கு மசியல்
ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்
நோய் எதிர்ப்பு சக்திக்கு முந்திரி பாதாம் பிஸ்தா அக்ரூட்
மலச்சிக்கல் போக்கும் கிஸ்மிஸ் 
இருமல் நீக்கும் கற்பூர வல்லி. 
உஷ்ணம் தணிக்கும் வெந்தயம். 
உடல்குளிர்ச்சிக்குச் சின்ன வெங்காயம்
தொண்டைக்கரகரப்பை நீக்கும் பனங்கல்கண்டு
குடல்புழு நீக்கும் வேப்பம்பூ
சர்க்கரை நோய்க்குப் பாகற்காய்.
பித்தம் தணிக்கும் நெல்லிக்காய்
இரத்த விருத்திக்கு கருப்பட்டி வெல்லம் 
இரும்புச் சத்துக்குக் கருவேப்பிலை
கண்பார்வை தெளிவாயிருக்கப் பொன்னாங்கண்ணி.
பசியைத் தூண்டுவது இஞ்சி
வாய் நாற்றம் போக்கும் புதினா
குடிவெறி நீக்கும் கொத்துமல்லி
வயிற்றுப்புண் நீக்குவது மஞ்சள்
தலைவலி நீங்க முள்ளங்கிச் சாறு
தேனுடன் இஞ்சி இரத்தத்தூய்மை
பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
மூலநோய் தீர வாழைப்பூக் கூட்டு
வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
குழந்தைப் பேறுக்கு சோம்புக் கசாயம்
வாயுத்தொல்லை நீக்கும் பெருங்காயம்
வாத நோய் தடுக்க அரைக்கீரை
சளியைப் போக்கும் வெற்றிலை ரசம்
வாய் துர்நாற்றம் நீக்கும் ஏலக்காய்
பருமன் குறைய முட்டைக் கோஸ்
உடல் எடை குறைய கீரைகள்

திங்கள், 3 ஜூன், 2024

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 

வியாழன், 2 மே, 2024

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒரு இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

2018 ஃபிப்ரவரி 14 ஆம் தேதி அன்று எனது நூலான காதல்வனம் டிஸ்கவரியின் படி வெளியீடாக வெளிவந்தது. அந்நிகழ்வில் உறவினர்களும் முகநூல் வலையுலக நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 



அன்று வந்த அவர்களில் இன்னும் சிலரை இங்கே பகிர்ந்துள்ளேன்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர், கணேஷ் ஐ ஏ எஸ்ஸின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர், இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியானதும் முதலில் வந்து வாங்கிப் பாராட்டியவர். 

காரைக்குடி அழகப்பா பல்கலையின் ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியவர். எப்போதும் உள்ளம் நிறைந்த புன்னகை மலர்ந்த அவர் முகத்தைப் பார்த்தாலே நம் உடலிலும் மனதிலும் எனர்ஜி ஏறிவிடும். 

எனது காதல்வனம் நூல் வெளியீட்டிலும் அவர் கலந்து கொண்டு பொன்னாடை எல்லாம் போர்த்தி வாழ்த்தினார். அந்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். 


திங்கள், 11 மார்ச், 2024

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

 என்னுடைய காதல் வனம் நூல் வெளியீட்டு விழா கடந்த 2019 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது. அன்றே இன்னொரு கவிதை நூலும் வெளியானது. அது அமீரகத்திலிருந்து தமிழ்த்தேர் என்றொரு இணையத்தை நடத்திக் கொண்டு அதே தமிழ்த்தேர் என்றொரு அச்சு இதழையும் வெளியிட்டு வரும் திரு காவிரி மைந்தன் அவர்களின் கவிதை நூல்தான் அது. மிகப் பெரும் சைஸில் வெளியிடப்பட்ட அந்நூலைப் பற்றி நான் முன்பே நூல் பார்வை எழுதி இருக்கிறேன். 


நிகழ்வில் திரு காவிரி மைந்தன் & பதிப்பாளர், புத்தக நிலைய அதிபர் திரு.வேடியப்பன்.

முதலில் என்னுடைய காதல் வனம் நூலை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள் திரு காவிரி மைந்தன், திரு வேடியப்பன், திருமதி மணிமேகலை மணி ( சாஸ்த்ரிபவன் யூனியன் லீடர் ), திருமதி மணிமேகலை சித்தார்த், திரு. இளங்கோ, செல்வி. கவிதா சொர்ணவல்லி மற்றும் என் கணவர் :) 

அடுத்துக் காதல் பொதுமறை நூல் வெளியீட்டு விழா. 

இந்நூலை நமது செட்டிநாட்டின் ஆசிரியர் திரு. ஆவுடையப்பன் நடராஜன் அவர்கள் வெளியிட முதல் பிரதியைத் திருமதிகள் -  மணிமேகலைகள் பெற்றுக் கொண்டார்கள். 

அடுத்த பிரதியை திருமதி கலையரசி அவர்கள் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். 
இல்வாழ்க்கையின் அன்பின் நிகழ்வுகளைக் காதல் காவியங்களாக ஆக்கி அளித்திருக்கும் காவிரி மைந்தனவர்களின் காதல் பொதுமறை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  

காதலர் தினத்தில் மட்டுமல்ல. இந்தக் காதல் பொதுமறையை வாழ்வு நெடுக இல்லற நெறியாகக் கைக்கொண்டால்  இதயங்கள் இனிமையில் நிரம்பும். வாழ்வு வசந்தமாகும். நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் பேரன்பு. 

சனி, 3 பிப்ரவரி, 2024

காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ

காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ

 காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ


செவ்வாய், 2 ஜனவரி, 2024

தலைவி தந்த அண்ணல்.

காதல் வனம் நூல் வெளியீட்டின் போது எனக்கு முழு ஊக்கம் கொடுத்தவர் அன்புத் தோழி மணிமேகலை அவர்கள். இவர் சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத்தலைவி மற்றும் தலித் பெண்கள் நலச் சங்கத்தலைவி. இரு முறை சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர்  கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் அமர வைத்தவர். 

நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப் “ பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர். 

அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் தொகுத்து வரும் மகளிர் தினத்தில் நூலாக்கம் செய்யவிருக்கிறார். அந்நூலை உங்களைப் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன். 

என் புத்தக வெளியீட்டில் என்னைச் சிறப்பு செய்த அவருக்கு நாங்களும் ஒரு பொன்னாடை போர்த்தி மகிந்தோம்.


எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர். மிகக் கூச்சத்தோடு ஏற்றுக் கொண்டார் :) 

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...