புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.

11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா நடக்க இருக்கிறது.
இதுபற்றி முழுமையான தகவல்கள் டிடி சகோவின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.
உங்கள் வருகையைப் பற்றித் தெரிவிக்கவும், உங்களைப்பற்றிய கையேட்டுக்கான குறிப்பிற்குத் தகவல்கள் தெரிவிக்கவும் அவரது இந்தப் பதிவைப் பாருங்க.
வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா.
முக்கிய விஷயம். இதை தங்கள் ப்லாகில் விட்ஜெட்டா போடுறவங்களுக்கு நினைவுப் பரிசாம். கேக்கவே இனிப்பா இருக்கில்ல. :)
அப்புறம் புதுக்கோட்டை என்பதால் பதிவர், சகோதரர் அஜித் அவர்கள் சொன்ன 515 கணேசன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பு செய்ய நானும் கேட்டுக்குறேன். :)
நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா வழக்கம்போல் சிறக்கவாழ்த்துகள். :) இதனை ஒருங்கிணைத்து செயல்படும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!.
************************************************************
சகோதரி மலீக்கா ஃபாரூக்கின் இரண்டாவது கவிதைத் தொகுதி பூக்கவா புதையவா இன்று முத்துப்பேட்டை - ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 20 ஆவது ஆண்டுவிழாவின்போது கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களால் வெளியிடப்படுகிறது. ( முதல் நூல் உணர்வுகளின் ஓசை கராமா, துபாயில் வெளியிடப்பட்டது என நினைக்கின்றேன் )
எங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்துகளும் உங்கள் கூடவே இருக்கும் மலீக்கா . நூல் சிறப்படைய வாழ்த்துகள்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!.
***************************************************
என்னுடைய நான்காவது நூல் ( மூன்றாவது கவிதைத் தொகுதி ) “பெண் பூக்கள்” நூல் இன்று லயோலா கல்லூரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. படிச்சுப்பார்த்துட்டு கருத்தை சொல்லுங்க. :)
இங்கேயும் கிடைக்கிறது.
Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam
நன்றி மக்காஸ்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!.


13 கருத்துகள்:
பதிலளிநீக்குWith Love Maroof17 ஆகஸ்ட், 2015 அன்று 10:24 AM
என்றும் தங்கள் அன்பை மறவேேன் அக்கா
ரொம்ப மகிழ்ச்சி
எனக்கு இறைவன் தந்த சகோதரி தாங்கள் மிக்க நன்றிக்கா
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்17 ஆகஸ்ட், 2015 அன்று 2:03 PM
விழாவில் சந்திப்போம்...
பதிலளிநீக்கு
”தளிர் சுரேஷ்”17 ஆகஸ்ட், 2015 அன்று 8:23 PM
விழா சிறக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
G.M Balasubramaniam17 ஆகஸ்ட், 2015 அன்று 8:29 PM
இந்தப் பதிவில் படிக்கப் பிரச்சனை இல்லை. வாழ்த்துக்கள் பதிவர் ஒற்றுமை ஓங்குக...1
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்17 ஆகஸ்ட், 2015 அன்று 10:29 PM
விழா சிறக்க எனது வாழ்த்துகளும்......
பதிலளிநீக்கு
Geetha17 ஆகஸ்ட், 2015 அன்று 11:26 PM
மிக்க நன்றி ....மா...புதுகை உங்களை வரவேற்கிறது...மகிழ்வுடன்
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu18 ஆகஸ்ட், 2015 அன்று 9:46 AM
விழாவில் சந்திப்போம்....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 அன்று 7:32 PM
நன்றி மலீக்கா. இறைவன் எனக்குக் கொடுத்த கொடைதான் உங்களைப்போன்ற வலைப்பதிவ சகோதர சகோதரிகள் மலீக்கா. நானும் ஆசீர்வதிக்கப்பட்டவளானேன். :)
முயல்கிறேன் டிடி சகோ
நன்றி சுரேஷ் சகோ
மிகுந்த சந்தோஷமடைந்தேன் பாலா சார்
நன்றி வெங்கட் சகோ
நன்றி கீத்ஸ்.
நன்றி துளசி சகோ & கீத்ஸ். முயற்சிக்கிறேன் :)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 அன்று 7:32 PM
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு
வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை21 செப்டம்பர், 2015 அன்று 10:51 PM
சகோதரிக்கு வணக்கம். தனிப்பதிவாக இருப்பதே வரவேற்கப்படுகிறது முழுமையான தகவல்கள் http://bloggersmeet2015.blogspot.com/ எனும் விழாவுக்கான தனி வலைப்பதிவில் இடப்படுவதைப் பார்க்க வேண்டுகிறோம். நன்றி சகோதரி.
பதிலளிநீக்கு
Rukmani Seshasayee24 செப்டம்பர், 2015 அன்று 5:19 PM
பதிவர் திருவிழாவில் தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
ருக்மணி சேஷசாயி
பதிலளிநீக்கு
cheena (சீனா)1 அக்டோபர், 2015 அன்று 6:38 AM
அன்பின் சும்மா - தேனம்மை - அருமையிலிம் அருமை - சும்மாவே தூள் கெளப்பிட்டீங்க - போங்க.
நல்வழ்த்துகள்
நட்புடன் சீனா
பதிலளிநீக்கு
வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை7 அக்டோபர், 2015 அன்று 8:14 AM
வணக்கம்...
தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்கு