எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2022

நீரின்றி அமையாது உலகு - 1.

 நீரின்றி அமையாது உலகு - 1.

நீரின்றி அமையாது உலகு. உண்மைதான். நதிக்கரையோர நாகரீகம் மட்டுமல்ல. இன்றைய மெட்ரோ சிட்டி வாழ்விலும் கூட புழல் நிரம்பியதா வீராணம் வருமா என்றெல்லாம்தான் யோசிக்க வேண்டி இருக்கு. எனவே பயணப் பொழுதுகளிலும் ஆன்மீகத் தலங்களிலும் நான் பார்த்த புஷ்கரணி, தீர்த்தங்கள், நீர் நிலைகள், கம்மாய்கள், ஊருணிகள், நதிகள், கடல் இவற்றை ( பம்ப்செட், கிணறு கூட வரலாம். ) ஆகியவற்றைக் க்ளிக்கி இங்கே பகிர்ந்துள்ளேன். 

இது வைவரன் கோவில் புஷ்கரணி. வைரவ தீர்த்தம். தீர்த்தக் கரைதனில் ஐந்து ரிஷபங்கள் காவல் வேறு. இதுவே அழகாக இருந்ததால் இப்படி எடுத்துள்ளேன். 

மேலே காண்பது அரியக்குடி பெருமாள் கோவிலின் கருட தீர்த்தம். கிணறு வடிவில் உள்ளது இத்தீர்த்தம். இறங்கிச் செல்லப் படிகள் உண்டு. வெளிப்பக்கம் கதவு போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். 

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...