எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 ஜூன், 2025

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

 திருவள்ளுவர் நற்பணி மன்றம் 


பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு 

திருமதி சுபாஷிணி திருமலை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா.

நாள்: 08.11.2020. ஞாயிற்றுக்கிழமை  நேரம்: காலை 11.00 மணி.

நிகழ்ச்சி நிரல்

11.00. இறை வணக்கம்.
11.05 வரவேற்புரை: திரு. பாமா. மனோகரன் தலைவர் திருவள்ளுவர் நற்பணி மன்றம் 
11.10. தலைமை உரை: திரு. பாரதி மணி எழுத்தாளர் மற்றும் திரைப்பட நாடகக் கலைஞர் பெங்களூரு, அவர்கள்.
11.20: திருமதி சுபாஷிணி அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தல்: திரு. சு. கிருஷ்ணகுமார்  திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
11.25: வாழ்நாள் சாதனையாளர்  விருது மற்றும் விருதுக்கான காசோலை  வழங்கிப் பாராட்டிப் பேசுபவர்: திரு. திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியர் அமுத சுரபி சென்னை  அவர்கள். 
11.40: வாழ்த்துரை:
பேராசிரியர். M A சுசீலா எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர். மதுரை
திரு  T விப்ர நாராயணன் தலைமை ஆசிரியர் இந்து மேல்நிலைப் பள்ளி சென்னை
திரு மோகன் கிருஷ்ணமூர்த்தி காந்திய சிந்தனையாளர் சென்னை
திருமதி. S.A பத்மாவதி (MAA) எழுத்தாளர். சென்னை.
திரு சந்தியா நடராஜன். பதிப்பாளர்.சென்னை
திரு R.ரவீந்திரன் சமூக ஆர்வலர் RAAC கோவை.
கவிதாயினி திருமதி தேனம்மை இலட்சுமணன் கரூர்
திரு. R.T தீர்த்தாரப்பன் தென்காசி ( TKC அவர்களின் கொள்ளுப் பெயரன்)
திரு.வே. முத்துக்குமார்.எழுத்தாளர்  நெல்லை.
12.10: திருமதி சுபாஷிணி அவர்களின் ஏற்புரை
12.25: நன்றியுரை திரு. B. V செந்தில் குமார் செயலாளர் திருவள்ளுவர் நற்பணி மன்றம்.
12.30. விழா நிறைவு.

புதன், 2 ஏப்ரல், 2025

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.

இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.

 இது மெயின் ஹால்.

சனி, 1 மார்ச், 2025

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.   திருவள்ளுவர் நற்பணி மன்றம்  பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு  திருமதி சுபாஷிணி திருமலை...